Sunday, February 5, 2017

பாண்டிச்சேரி - Pondicherry

புதுச்சேரி (Puducherry) அல்லது பாண்டிச்சேரி, புதுவை எனவும் இந்த ஒன்றியப் பகுதி அழைக்கப்படுகின்றது. சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன.

ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.



பாண்டிச்சேரிக் கடற்கரை






சூரிய உதயம்





விசித்திர மீன்


“Paradise Beach” ன் பொருள் “சொர்க்கத்தில் கடற்கரை”

“சங்கமம்” திரைப்படத்தில் வரும் "வராக நதிக்கரையோரம்" பாடலின் "வராக நதி"யே தமிழகத்தில் சங்கராபரணி ஆறு எனவும், செஞ்சி ஆறு எனவும், பாண்டியில் சுண்ணாம்பு ஆறாகவும் அழைக்கப்படுகிறது. அச்சுண்ணாப்பு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள கடற்கரை.

கடற்கரை ஒட்டி பள்ளமான பகுதியில் நீர், சற்று தள்ளி நீருக்குளேயே சற்று மேடான மணற் பகுதி என கடலுக்குள் இயற்கை நீச்சல் குளம் போல.


















ஆரோவில் (Auroville) என்பது தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.




ஆரோவில் (விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு)

எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் மதக் கோட்பாடுகளையெல்லாம் அரசியல் ஈடுபாடுகளையெல்லாம் நாட்டுப்பற்றுகளையெல்லாம் தாண்டி அமைதி, மேலும் மேலும் சிறந்து வளரும் சமூகம் முதலியவற்றின் அடிப்படையில் வாழக்கூடிய ஒரு சர்வதேச நகரமாக இருக்க ஆரோவில் விரும்புகிறது. மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே ஆரோவில்லின் நோக்கமாகும்’ என்ற பிரகடனத்தோடு ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது
















ஆரோவில்லைக் காண விரும்புகிறவர்களுக்கு
  • ஆரோவில்லின் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையம் (VISITORR’S INFORMATION CENTRE) உள்ளது. அங்கு ஆரோவில் பற்றிய கண்காட்சி, மற்றும் படக்காட்சி ஆகியவற்றைக் காணலாம்.
  • உணவு விடுதி மற்றும் ஆரோவில்லில் உற்பத்தி செய்யப் பெறும் கைவினைப் பொருட்கள், விற்பனை செய்யும் அங்காடிகள் உள்ளன. மேலும், ஆரோவில் பற்றிய நூல்கள், துண்டறிக்கைகள், கையேடுகள் வழங்கும் சேவை மையங்களும் உள்ளன.
  • அதனைப் பார்வையிடும் அன்பர்களுக்குத் தோட்டத்திற்குச் சென்று மாத்ரி மந்திரைத் தொலைவிலிருந்து பார்வையிட நுழைவுச்சீட்டு வழங்கப் பெறும். அதற்கென எந்தக் கட்டணமும் கிடையாது. அதனைப் பெற்றுக் கொள்வோர், ஆம்பித் தியேட்டர் வரை சென்று தோட்டங்களைப் பார்வையிடலாம்.
  • அடுத்த கட்டமாக வரும் ஆன்மிக அன்பர்கள் மாத்ரிமந்திரின் 12 இதழ் அடுக்கு அறைகளுள் அமர்ந்து தியானம் புரிய அனுமதிக்கப் பெறுவர்.
  • மைய உள் அறைக்குச் சென்று மன ஒருமையடைய வேண்டுவோர் மாத்ரி மந்திர் அலுவலகத்தில் தொலைபேசி வழியிலோ, நேரிலோ முன்பதிவு செய்து கொண்டு, முறையான அனுமதி பெற்றுச் செல்லலாம். மழைநாட்களில் அனுமதி இல்லை. மாத்ரிமந்திர் பகுதியில் நுழையும்போது பூரண அமைதிநிலைக்குத் தயாராகிக் கொள்வது நல்லது.
  • பொதுவாக, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணிமுதல் 12.30 வரையிலும் அனுமதி உண்டு. ஏனைய நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரைக்கும் உண்டு.
  • முன் அனுமதி பெற்றவர்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவிலேயே மாத்ரிமந்திரினுள் செல்ல அனுமதிக்கப் பெறுவதால் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது நல்லது. மழைநாட்கள் மற்றும் சில குறிப்பிட்ட தினங்களில் மாத்ரி மந்திருக்குள் செல்ல அனுமதிக்கப் பெறாத நிலையில் முன்கூட்டியே அதற்கான தகவல்களைத் தெரிந்து கொண்டு வருவது நல்லது. முக்கியமாக, சிறப்பு அனுமதி பெற்றுத் தருவதாகவோ, பிற சலுகைகள் செய்வதாகவோ சொல்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

2 comments: