Sunday, July 2, 2017

ஓதிமலை - Othimalai


தல வரலாறு
நன்றி (Courtesy) Worldkovil.com

ஒருமுறை கயிலை வந்த பிரம்மதேவன் முருகப் பெருமானை கண்டும் காணாததுபோல் நகர்ந்தார். குமரன் பாலகன்தானே என்ற எண்ணம்.

உடனே முருகப்பெருமான் பிரம்மனை அழைத்து பிரணவத்துக்கு பொருள் கேட்க, அவர் பதில் கூறத்தெரியாமல் விழித்தார். உடனே அவரை சிறையிலடைத்தான் முருகன். இரும்பாலான அறையில் பிரம்மனை சிறைவைத்ததால் அந்த இடம் இரும்பறை என பெயர்பெற்றது. சுவாமி மலையில் முருகனிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்ட ஈசன், இங்கு வேதாகமங்களுடைய பொருளைக் கேட்க,  மலையின்மீது குருவாக இருந்து ஓதியதால், இத்திருக்கோவில் ஓதியமலை- ஓதிமலை என்று பெயர்பெற்றது.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமைவாய்ந்தது இக்கோவில். ஓலைச்சுவடிகள் கூறும் செய்திகளின்படி சேரமான் பெருமான், மனுநீதிச் சோழன், வஜ்ராங்க பாண்டியன் ஆகிய மூவேந்தர்களும் எட்டு புண்ணிய நதிகளிலிருந்து புனிதநீர் எடுத்துவந்து திருக்குட நன்னீராட்டு விழா நடத்திய பெருமைவாய்ந்த தலம். தமிழகத்தில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ள குன்றுகளில் மிகவும் உயரமானது ஓதிமலை. 70 டிகிரி கோணத்தில் செங்குத்தான இம்மலை தனிமலையாக உள்ளது. அடிவாரத்திலிருந்து 1,800 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முருகன் ஆலயம் கற்றளியாக உள்ளது. முற்காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இவ்வாலயம் 1932-ல் செங்கற்கலவை நீக்கி கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மலையின்மேல் கருவறையில் ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடன் நிறைநிலையில் அருள்புரிகிறான் முருகன். அது ஏன் ஐந்து தலை? எட்டுக் கரங்கள்?

பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாண சிலை செய்வதற்காக பழனிநோக்கிச் சென்ற சமயம் வழிதெரியாமல் போகவே, இம்மலையின் அடிவாரத்தில் ஈசானிய திக்கில் முருகனை வேண்டி யாகம் நடத்தினார். அப்போது இத்தல முருகன் அவருக்கு வழிகாட்டி, இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குமாரபாளையம் வரை உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு முகங்கள், 12 கரங்களுடன் இருக்கும் முருகன், போகருக்கு வழிகாட்ட ஒருமுகம் நான்கு கரங்களுடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்கள், எட்டுக் கரங்களுடனும்; குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒருமுகம், நான்கு கரங்களு டனும் இருப்பதாக தலபுராணம் சொல்கிறது.

பிரம்மனை சிறையிலடைத்து தானே படைப்புத் தொழிலைத் தொடங்கிய முருகன், பிரம்மாவுக்கு ஐந்து முகங்கள் இருந்ததுபோலவே தானும் ஐந்து முகங்களுடன் இருந்து படைப்புத் தொழிலைச் செய்தார். இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம் எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்துயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகப் பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். அதன்படியே விடுவித்தார் முருகன் என்கிறது தலவரலாறு.

அம்பிகை இல்லாத சிவன்பிரம்மாவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோவிலில் இருக்கிறார். உடன் அம்பிகை வரவில்லை. இரும்பறை கைலாசநாதர் கோவில் என்றழைக்கப்படுகின்ற இத்தலத்தில் அம்பிகை சந்நிதி கிடையாது. மற்ற பரிவார மூர்த்திகளும் கிடையாது. விநாயகர், நந்தி பின்னாளில் வைக்கப்பட்டது. அரசமரமும் ஆலமரமும் இத்தலத்திலுள்ளது விசேஷம்.



































இத்திருக்கோயில் திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் மற்றும் வளர்பிறை சஷ்டியிலும் மட்டுமே நடைத் திறக்கப்படும்.

நாங்கள் முருகனை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். வழியில் இரும்பறை கைலாசநாதரை வணங்க இரும்பறை சென்றோம். அங்குள்ள குருக்கள் தான் இந்த ஓதிமலைக் கோவிலுக்கும் குருக்கள் போல அவர் நமக்கு வழங்கிய சில புகைப்படங்கள் ....

இரும்பறை கைலாசநாதர் திருக்கோயில்




ஓதிமலை முருகன் 






Saturday, July 1, 2017

பரளிக்காடு - Baralikadu


நேற்றைய (30-ஜூன்-17) இரவை கோத்தகிரியில் கழித்துவிட்டு, காலையில் விரைவாக எழுந்து மேட்டுப்பாளையம் சென்றோம். காலை உணவை மேட்டுப்பாளையத்தில் முடித்துவிட்டு அப்படியே பரளிக்காடு செல்ல உத்தேசம். பரளிக்காடு செல்ல வனத்துறையின் முன் அனுமதி பெறுதல் அவசியம். நாங்கள் முன்னரே தெரிவித்தமையால் ... மேட்டுப்பாளையத்தில் காலை உணவை முடித்து விட்டு பரளிக்காடு நோக்கி பயணித்தோம்.

பரளிக்காடு

பவானிக்கு குறுக்காக கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையின் பின்பகுதியில் உள்ளது பரளிக்காடு. வனப்பிரதேசமான இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையினர் கட்டுப்பாட்டில் நடந்து வருவது சூழல் சுற்றுலா. தமிழகத்திலேயே வனத்துறையினர் கண்காணிப்பில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் ஒரே சூழல் சுற்றுலா தலம். மனம் மயங்கும் கொஞ்சும் இயற்கை எழில், தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் ஆறு, இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகில் நிரம்பி உள்ளது பரளிக்காடு.

மறக்கமுடியாத அனுபவத்தோடு, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர்களுக்கு பரளிக்காடு சரியான தேர்வாக இருக்கும். இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியுடன், மது மற்றும் புகைபிடிக்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், போன்ற சில கட்டுபாடுகளை ஏற்கிறோம் என உறுதியளித்து வனத்துறையிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் பரளிக்காட்டிற்கு சுற்றுலா செல்ல தடையில்லை.

பரளிகாட்டில் சுற்றுலா பயணிகள் தங்க வசதி உள்ளது. 8 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள், 5 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

முன் அனுமதி மற்றும் விபரங்களுக்கு

(+91) 9047051011
(+91) 9843094900
(+91) 9489739273 

(0425) 4275423


சனி, ஞாயிறு மற்றும்  அரசு விடுமுறை நாட்கள் மட்டும்.

வார நாட்களில் 60 பேர் கொண்ட குழுவினர் சென்றால் மட்டும் அனுமதி வழங்கப்படும்.



  
மேட்டுப்பாளையத்திலிருந்து வெள்ளியங்காடு வரை சாலை அழகாய் ... அதன் பின்னர் கரடு முரடாக ...



இருமருங்கிலும் வாழை, தென்னை எனத் தோப்புகள், தோப்புகளில் மயில்கள் என அழகோவியமாய்.



பரளிக்காடு படகுத் துறை

பெரிய ஆலமரங்களில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சல் ... வயது வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஆட!



நம்மை சூடான கொத்தமல்லிக் காப்பியோடு வரவேற்கின்றனர்.



அணையில் தோராயமாக ஒரு மணி நேர படகுப் பயணம்.













அணையில் தோராயமாக ஒரு மணி நேர படகுப் பயணம். நன்கு களைத்தப்பின் அங்கு வாழும் பழங்குடியினர் சமைத்த உணவு ... காட்டில் இத்துனை ருசியான உணவா ... என வியக்கும் வண்ணம் அருமையான உணவு (அசைவம் உட்பட)




உண்டு ... சிறிது ஓய்வெடுத்தபின் ... சிறிது நேரப் பயணத்திற்குப் பின் ஆற்றுக்குளியல் ... மனதும், உடலும் குளிர !



வனவிலங்குகள் மலையிலிருந்து இறங்காமல் இருக்க மலையைச் சுற்றி அகழி!






சூழல் சுற்றுலா முடிந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி, வழியில் வனபத்ரகாளியம்மனை வணங்கிவிட்டு ...







அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

1. கோத்தகிரி - Kotagiri
2. இரங்கசாமி சிகரம் & தூண் (Rangaswamy Peak & Pillar)
3. கொடநாடு காட்சி முனை (Kodanad View Point)
4. தட்டப்பள்ளம் எஸ்டேட் நடைபயணத்திற்கு - Thattapallam (Estate) Trekking
5. Katary Water Falls
6. Kullakamby Water Falls