Thursday, June 24, 2010

சென்னை புனிதத் தோமையர் மலை தேவாலயம் - Chennai St Thomas Mount Church

புனிதத் தோமையர் மலை தேவாலயம்

இன, மொழி, மத, மாநில, தேச எல்லைகளைக் கடந்து அனைவரும் வந்துச் செல்லும் ஆலயமாகத் திகழ்கிறது.

இந்த ஆலயத்தின் வரலாறு குறித்தும், புனித தோமையர் இந்தியா வந்தாரா? எனவும் பலர் பல்வேறாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவற்றை நாம் வாசகர்களின் எண்ணத்திற்கு விட்டு விடுவோம். இப்பொழுது சிலப் புகைப்படங்கள் . . .
 





மேலே வருவதற்கான சாலைகள் அமைக்கும் பணி ...








Monday, June 14, 2010

திருத்துறையூரிலிருந்து தென்பெண்ணையாறு வரை - ThiruThuraiyur

துறையூர்களைப் பற்றி ஆய்கையில் திருத்துறையூரைப் பற்றி அறிந்து நாம் அங்கு பயணப்பட்டோம்.

திருத்துறையூரைப் பற்றி ஒரு முன்னூட்டம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்களில் (ஏழாம் திருமுறை) பாடப்பெற்றத் திருத்தலம்.  (தமிழ் ஆர்வலர்களுக்காக பாடல் 123 (7.13.1) முதல் 7.13.11 (133) வரை வாசிக்க.)

சுந்தரர் காலத்தில் ஊரில் தென்பால் ஓடிய பெண்ணையாறு; இன்று வடபால் ஓடுகிறது. (பழைய பெண்ணையாறு, மலட்டாறு, வறட்டாறு, ஓரையாறு என்னும் பெயரில் தென்பால் உள்ளது.)

திருத்துறையூர் பன்ருட்டிக்கு வடமேற்கே 8 கி.மீ. தொலைவிலுள்ளது.

(Courtesy: Google Maps)


நாம் ஊரை அடைந்தபொழுது கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தமையால், நடை திறப்பதற்குள் ஊரைச் சுற்ற கிளம்பினோம்.



கோவிலுக்கு எதிரில் தெப்பக்குளம், தரையோடு தரையாக ஒட்டினாற்போல் தண்ணீர்.


ஊரின் வடதிசைச் சாலையில் நடக்கலானோம்.

வறண்ட குளமோ / சிறிய ஏரியோ?
 


ஆள் ஆரவாரமற்ற... அமைதியான சாலையில்... வட திசை நோக்கி....


சவுக்குத் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், பனை, தென்னை மரங்கள், வாழை மரங்கள் ... என வழி நெடுக இயற்கையெழில் கொஞ்சும் வயல்வெளிகள். காற்றில் வரும் ஓசையை கேட்கையில் ஏதோ ஓடையோ / ஆறோ அருகிலிருப்பதைப் போல் தோன்றியது. (ஆனால் அப்படி எதுவுமில்லை.)

சுமார் 2 கி.மீ தொலைவில் நமது சாலையின் இடப்புறம் ஏரி ஒன்று, சமீபத்தில் பெய்த மழையால் சிறிது தேங்கிய தண்ணீர். ஏரிக்கரையில் ஆலமரம்... அட நாம் சிறிது களைப்பாறலாமே!

(தண்ணீர் பாட்டில், ரொட்டித்துண்டுகளும் கிடைத்தாலே நமக்கு அதிர்ஷ்டம் எனலாம், அப்படிப்பட்ட சிற்றூர்!)
 
ஆலமரத்தடியில் ஓய்வெடுத்தப்பின்னர், ஏரியை நமது புகைப்படக் கருவியால் சிறைபிடித்தோம். (புகைப்படமெடுக்க ஆலமரத்திலேறி கீழே விழுந்தது, தனிக்கதை!)
 

ஏரியின் தென்பாதி

 
தென்பெண்ணையாற்றை நோக்கிச் செல்லும் சாலை
 
 
ஏரியின் வடபாதி
 
 
ஏரியின் நடுவில் சிவலிங்கம், (தொன்மயான வரலாற்றை நம்மால் அறிய முடியவில்லை என்பதில் சற்று வருத்தமே!)
 


மீண்டும் சவுக்குத் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், பனை, தென்னை மரங்கள், வாழை மரங்களைக் கடந்து ....
 
பலா மரம் !!!
 


தூக்கனாங்குருவிக் கூடு
 

நமது கண்ணில் அகப்பட்டு புகைப்படக்கருவியிடமிருந்து தப்பியவைகள்: ரெட்டை வால் குருவி, எறும்புத்திண்ணியா / உடும்பா எனத் தெரியவில்லை, பாம்பு ....

இத்துனைச் சோலைகளைக் கடந்து பெண்ணையைக் காண்கையில் நமக்கு பெரும் ஏமாற்றமே!

பெண்ணையா, பாலையா என்பது போல் ...

 
நெடு நேரமானதால், மீண்டும் கோவிலை நோக்கி தென்பெண்ணையிலிருந்து தெற்கே நடக்கலானோம் வழித்தடங்களின் இயற்கையோவியங்களை ரசித்தவாறு!
 
தலச் சிறப்புக்கள்

தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது; மேற்கு நோக்கிய சந்நிதி.
சுந்தரர் தவநெறி வேண்டிப்பெற்ற தலம்.


'சிவஞானசித்தியார்' என்னும் சாத்திர நூலைப் பாடிய அருணந்தி சிவாசாரியார் (சகலாகம பண்டிதர்) அவதரித்து வாழ்ந்த தலம்.

அம்பாள் சந்நதி வடக்கு நோக்கி


தலமரத்திற்குப் பக்கத்தில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம்


கொடிமரம்


தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது.


சைவ சமய குரவர்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்)


கோவிலைச் சுற்றிலும் கல்வெட்டுகள்
(கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் "ராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருத்துறையூர் " என்றும்; இறைவன் பெயர் "தவநெறி ஆளுடையார்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்தி. )


Sunday, June 6, 2010

உத்திரமேரூர் - Uthiramerur

உத்திரமேரூர்

நமது பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் படித்த (படித்ததாக வைத்துக் கொள்வோம்!) வரலாற்று சிறப்பு மிக்க ஊர்.

ஊரைப் பற்றி ஒருச் சிறு அறிமுகம்

உத்திரமேரூர், சுமார் 1250 வருட வரலாற்றைக் கொண்ட ஊர். பல்லவன் (நந்தி வர்மன் 2) காலத்தில் உருவாகி பின் சோழ, பாண்டிய மற்றும் சம்புவராயர்காளால் ஆட்சிக்குட்பட்ட கிராமம் இது. அந்நாளில் இங்கு நடைப்பெற்ற தேர்தல் (சோழகளின் முறைப்படி - "குடவோலை") மற்றும் தேர்தல் விதிமுறைகளைப் பற்றி அமைந்துள்ள கல்வெட்டுக்களினால் இவ்வூர் வரலாற்றில் சிறப்பு பெற்றது.

தேர்தல் விதிமுறைகள்

1) கால்வேலி நிலமாவது தேவை.
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்.
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்.
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்.
5) ஆசாரம் வேண்டும்.
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்கவேண்டும்.

Uthiramerur has a 1,250-year history.The Pallava king Nandivarman II established it around 750 A.D.It was ruled by the Pallavas, the Cholas, the Pandyas, the Sambuvarayars, the Vijayanagara Rayas and the Nayaks. Stone edicts and carvings found in Uthiramerur have shown clues of local self governance during Chola imperial period. The elections were held by a method called Kudavolai. The edicts are called Uthiramerur Kalvettu after the place. It was inscribed on the walls of the village assembly (grama sabha mandapa), which was a rectangular structure made of granite slabs that the village had a perfect electoral system and a written Constitution prescribing the mode of elections.This inscription, dated around 920 A.D. in the reign of Parantaka Chola, is an outstanding document in the history of India.


  


வரதராஜா பெருமாள் கோவில்

இந்தக் கோவிலும் கிட்டத் தட்ட 1000 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. கோவிலில் நுழைந்ததும் வலப்புறம் திரும்பினால் வரும் ஒரு சிதிலமடைந்த மண்டபம் எத்தனை ஆண்டு வரலாற்றுச் சிறப்புக் கொண்டதோ தெரியவில்லை, ஆனால் தற்சமயம்...மாட்டுக் கொட்டகையாய்!
 
இவ்வளவு சிறப்பு மிக்க ஊர், அதன் அடையாளங்களை உணராமல் அவை சிதிலமடைந்துக் கிடப்பதைப் பார்க்கையில் நமக்கு... ஏணோ ஊள்ளூர வலிக்கிறது.