Sunday, March 17, 2013

வேலூர் கோட்டை - Vellore Fort

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை. இது 16 - ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 16 - ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சிசெய்த விஜயநகர வம்சத்தைச் சார்ந்த சின்ன பொம்மி நாயக்கர் என்னும் மன்னரால் இது கட்டப்பட்டது. 1650 - ஆம் ஆண்டில் பிஜப்பூர் சுல்தானும், 1676 - இல் மராட்டியரும், 1708 - இல் தில்லியின் தௌலத்கானும் கைப்பற்றினர். பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பிலும் இருந்தது. கி.பி. 1760 - ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் சென்றது.

இந்தக் கோட்டை தரையில் கட்டப்பட்ட பாதுகாப்பு அரண்களுள் இந்திய அளவில் சிறப்புப் பெற்றது. இதைச் சுற்றி ஆழமான அகழி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான முதலைகள் வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அகழி 190 அடி அகலமும், 20 அடி ஆழமும் உடையது. அகழியை அடுத்து இரண்டு அடுக்கு கோட்டைச்சுவர் உள்ளது. முதல் கோட்டைச்சுவர் மற்ற கோட்டைச் சுவர்களைவிட உயரம் குறைந்ததாக உள்ளது. இடை இடையே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உயரம் 30 அடிகள்.

விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்.

மைசூரை ஆண்ட திப்புசுல்தானை வென்ற பிறகு அவரது மகன்கள் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.

1806 - ஆம் ஆண்டு இந்தியச் சிப்பாய்கள் கலகம் நடந்தபோது இங்கிருந்த சிப்பாய்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் கலகம் செய்தனர். கலகத்தில் ஈடுபட்ட 95 சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இன்றளவும் இங்கு உள்ளது.

இந்தக் கோட்டைக்குள்ளே ஒரு மசூதியும், இந்து கோவிலும், கிறிஸ்தவ ஆலயமும் உள்ளன. தமிழக காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றும், இந்திய தொல்பொருள் துறை அருங்காட்சியகமும் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோட்டை கி.பி. 1921 - ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Vellore Fort is a large 16th-century fort situated in Vellore city, in the state of Tamil Nadu, India built by Vijayanagara Kings. The Fort was at one point of time the headquarters of the Aravidu Dynasty of Vijayanagara Empire. The fort is known for its grand ramparts, wide moat and robust masonry.

The Fort's ownership passed from Vijayanagara Kings, to the Bijapur Sultans, to Marathas, to the Carnatic Nawabs and finally to the British, who held the fort until India gained independence. The Indian government maintains the Fort with the Archaeological Department. During British rule, the Tipu Sultan's family and the last king of Sri Lanka, Sri Vikrama Rajasinha were held in as prisoners in the fort. The fort houses a Christian church, a Muslim mosque and a Hindu temple, the latter of which is famous for its magnificent carvings. The first rebellion against British rule erupted at this fort in 1806, and it is also a witness to the massacre of the Vijayanagara royal family of Sriranga Raya.

Vellore Fort Map (Courtesy: Google Maps)


Vellore Fort Map (1806)


 கோட்டைச்சுவர்






ஜலகண்டேஸ்வர் கோவில்



தமிழ் எழுத்துக்கள் (பல்வேறு காலங்களில்)


Saturday, March 16, 2013

ஏலகிரி - Yelagiri

கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய பச்சைக்கம்பளப் பகுதி, வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது மலை. படகு துறை இருக்கிறது. அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கிறது. ஒவ்வொரு வளைவிற்கும் கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி, பேகன் என அழகிய தமிழ் பெயர்கள்.

பலாப் பழம், சீதாப் பழம், கொம்புத்தேன் மற்றும் மலைத்தேன் கிடைக்கிறது.

அதனாவூர் ஏரியில் படகு சவாரி உண்டு. அருகிலேயே பெரியதொரு சிறுவர் பூங்கா உள்ளது. இன்னும் அரசுத்தோட்டம், மூலிகைப் பண்ணை, தொலைநோக்கி இல்லம், நடைப்பயண பாதை, பரண் இல்லம் என்று பார்வையாளர்களை கவரும் பல அம்சங்கள் உண்டு.




இங்கு மலையேற்றம் உங்களுக்கு சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஏழு பாதைகள் இங்கு உள்ளன.

கடோத்கஜன் சிலை ஒரு பாறையின் மேல் நிறுவியுள்ளனர். இங்கு இருந்து பார்த்தால் மொத்த ஏலகிரியையும் கழுகு பார்வையில் பார்த்து மகிழலாம்.

1. புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. உள்ளதிலேயே நீளமான பாதையாகும்.
2. புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் உள்ளது. இது பலராலும் விரும்பப்படும் பாதையாகும். இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.  
3. மங்களம் முதல் சுவாமி மலை செல்லும் 2 கி.மீ. தூரப்பாதை,
4. தகவல் மையத்திலிருந்து கூசிக் குட்டை செல்லும் 1.5 கி.மீ. தூரப்பாதை.
5. புதூரிலிருந்து பெருமாடு நீர்வீழ்ச்சி செல்லும் 3 கி.மீ. தூரப்பாதை.
6. படகு வீட்டில் இருந்து புளிச்ச குட்டை செல்லும் 3 கி.மீ. தூரப்பாதை.
7. நிலாவூரிளிருந்து கரடிமுனை செல்லும் 1.5 கி.மீ. தூரப்பாதை.

நங்கள் மங்களம் முதல் சுவாமி மலை செல்லும் பாதையில் மலையேறினோம்.

(Courtesy: Google Maps)









காட்டுத்தீ ஏற்படாமலிருக்க கிராம மக்களே சில பகுதிகளைத் தீ வைத்திருந்தனர். தீயில் ஒரு மரம் முறிந்து மின்சாரக் கம்பியில் விழுந்திருந்தது. இதனால் நடைப்பயணம் பாதியிலே முடிவுற்று!