Saturday, December 22, 2012

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் - Thiruporur Murugan Temple


திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தனித்துவம் கொண்டது. ஏனெனில் அசுரர்களை அழிக்க முருகன் போரிட்ட 3 முக்கிய இடங்களில் திருப்போரூரும் ஒன்றாகும்.

திருச்செந்தூரில் சூரபத்மனுடன் போரிட்ட முருகன் மாயையை அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் சண்டையிட்ட முருகர் கன்மத்தை அதாவது வினைப் பயனை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது. திருப்போரூரில் தாரகசுரனை எதிர்கொண்டு சண்டையிட்ட முருகன் அவனது ஆணவத்தை அடக்கி ஞானம் கொடுத்தார்.

இந்த போர் விண்ணில் நடந்தது. இதனால் திருப்போரூர் தலம் போரூர் என்றும் அழைக்கப்படுகிறது. தாரகனுடன் போர் நடந்த காரணத்தால் தாருகாபுரி, சமராபுரி என்றும் பெயர்கள் ஏற்பட்டன. கந்த சஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகன், சமராபுரிவாழ் சண்முகத்தரசே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம்.

Courtesy: Google Maps

தற்சமயம் ஆலய மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



மீன்கள் செறிந்துக் காணப்படும் இக்குளத்தில் மீன்களுக்கு பொரியிட்டு மகிழழாம்...





No comments:

Post a Comment