Showing posts with label அருவிகள் - Falls. Show all posts
Showing posts with label அருவிகள் - Falls. Show all posts

Sunday, January 1, 2023

ஏலகிரி - Yelagiri

புத்தாண்டை வரவேற்க வழக்கம் போல் கடைசி நிமிட திட்டமிடல் இம்முறை ஏலகிரி கூடார அனுபவத்திற்கு!

 ஏலகிரி குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

    ஏலகிரி - Yelagiri (2013) 


நண்பர்களின் குடும்பத்துடன் சென்னையிலிருந்து ஏலகிரிக்கு காரில்  சென்றடைந்தோம். மதிய உணவை உண்ட பின்பு ஏரி பூங்கா, கடைவீதி என ஒரு சுற்று வந்தப்பின் கூடார முகாமிற்கு சென்றோம்.

நல்ல புல்வெளி, திறந்தவெளி திரை, ஒலிபெருக்கிகள், மின்விளக்குகள், தொலை நோக்கி என குதூகலமான சூழல் !!!





மாலைக்கு பின்பு பனி பெய்ய ஆரம்பித்து நேரமாக அதுவே மழைப் போல பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது (வெப்பநிலை தோராயமாக 13°C - 14°C இருக்கலாம்.) பார்பெக்யூ வில் வெந்தது வேகாதது என வயிற்றுக்குள் கொஞ்சம் தள்ளி ... 



இரவு உணவை உண்டபின்பு குளிர் தாங்க முடியாமல் கூடாரத்திற்குள் அடைந்து கொண்டோம்  ... நள்ளிரவு 12 மணி நெருங்கும் வேலையில் மீண்டும் வெளியில் வந்து ஒரு ஆட்டம் பாட்டம் ... சில நிமிடங்களில் மீண்டும் கூடாரத்திற்குள்!!!

எங்களை போல நிறைய பேர் வித்யாசமான அனுபவத்திற்காக வந்திருந்ததால் கூட்டம் சற்று அதிகமாகவே .. படுக்கை விரிப்புகள், தலையணை என கொஞ்சம் பற்றாக்குறை வேறு ... தாங்கமுடியாத குளிரில்!!!

என்னுடைய நண்பர்கள் என்னை பார்த்த விதம்!


காலையில் ஒரு சிறு நடை காட்டு வெளியில் ... பின்பு காலை உணவிற்கு பிறகு ஏரி பூங்காவிற்கு கிளம்பினோம். சிறார்கள் விளையாட சிறிது நேரம் செலவிட்ட பின்பு .. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சென்று ஒரு குளியலை போட்டு விட்டு சென்னை திரும்பினோம்!


கொட்டும் பனியில் விண்மீன்களுடன் கூடாரத்தில் ஓர் இரவு ... புத்தாண்டை வரவேற்க, பார்ப்போம் இந்த ஆண்டு எவ்வாறு பயணிக்கிறது என்று !!!

Wednesday, August 17, 2022

பரம்பிக்குளம் - Parambikulam

பரம்பிக்குளம் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

     பரம்பிக்குளம் - Parambikulam (2014)

 





















Valparai - வால்பாறை 





















Thursday, December 23, 2021

"தடா" நீர்வீழ்ச்சி - Tada Falls

 "தடா" நீர்வீழ்ச்சிக் குறித்து நமது முந்தைய பதிவு(கள்)

"தடா" நீர்வீழ்ச்சி - Tada Falls (2016)

நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா, தடாவிற்கு!

வார நாட்களில் சென்றிருந்தோம், அதனால் கூட்டம் ஏதுமில்லாமல் மிக ரம்மியமாக இயற்கையை ரசித்து விட்டு வந்தோம்!



குளிர்ந்த பளிங்கு போன்ற தெளிந்த நீர்!



மக்கள் இரைச்சல் இல்லாமல் ... இயற்கை எத்துனை அழகாய்!









மிக அதிக எண்ணிக்கையிலான குரங்குகள், எங்கள் பைகளை பிடுங்கி அதிலிருந்த தின்பண்டங்களை எல்லாம் அபகரித்தது வானரக் கூட்டம், ஆதலால் உணவு பொருட்களை வண்டியிலோ (காரிலோ) வைத்து செல்வது நல்லது!



உடலும் உள்ளமும் குளிர நன்கு குளித்து களித்து (களைத்து) ... !!!




நீர்த்தேக்கத்தை காட்சி முனையிலிருந்து கண்டு களித்து ... வீடு திரும்பும் வழியில் வயலில் அமர்ந்து உண்டோம். இனிமையான குளுமையான பயணம்!