Saturday, September 1, 2018

இஸ்கான் கோவில் சென்னை - ISKCON Temple Chennai

சோழிங்கநல்லூர் கிழக்குக் கடற்கரைச் சாலை "அக்கரை" பகுதியில் பக்கிங்காம் கால்வாயின் கிழக்குக் கரையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் [ISKCON] சார்பாக நிறுவப்பட்ட கிருஷ்ணர் கோவில் சுருக்கமாக இஸ்கான் கோவில் என்றழைக்கப்படுகிறது.

பக்கிங்காம் கால்வாய்: சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19-20 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இதன் தற்போதையை நிலை வேதனைக்குரிய ஓன்று!

கோவில் வளாகம் தூய்மையாகவும் அமைதியாகவும் ... தியானிக்க ஏற்ற இடம்.

இவ்வழியே நாம் பலமுறை கடந்திருந்தாலும் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு தற்பொழுது தான் அமைந்தது.



பலராமர், சுபத்ரா மற்றும் ஜகநாதர்


ஸ்ரீ ராதா கிருஷ்ணா மற்றும்  லலிதா, விசாகா



கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் கதைகள் ஓவியங்களாக ...

கம்சனின் சிறையில் பிறந்த ஸ்ரீகிருஷ்ணருக்கு அவரது தாய் தந்தையர் வசுதேவரும், தேவகியும் பிரார்த்தனை செலுத்துதல்.


வசுதேவர்  ஸ்ரீகிருஷ்ணரை கூடையில் வைத்து கோகுலத்துக்குத் தூக்கிச் செல்லும் காட்சி, யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வழி விடுகிறது, கொட்டும் மழைக்கு குடையாக ஆதிசேஷன் பின்னால் வருகிறார்.


பூதனை எனும் அரக்கி தன்னுடைய மார்பில் விஷத்தைப் பூசி  ஸ்ரீகிருஷ்ணருக்கு பால் புகட்ட அவர் பாலோடு அவள் உயிரையும் உறிஞ்சி எடுத்து விடுகிறார். ஆனாலும், அவள் மறைந்த பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு தாயார் அந்தஸ்தை கொடுக்கிறார்.



வெண்ணெய் திருடியதற்காக தண்டிக்கும் யசோதை, மகனின் வால் தனத்தைக் கட்டுப் படுத்த உரலில் கட்டிப் போடுகிறார்.


வெண்ணை திருடி உண்ணும் ஸ்ரீகிருஷ்ணர்.


காலியா என்ற பாம்பின் தலைகள் மீது நடனம், அந்தப் பாம்பின் மனைவிகள் தங்கள் கணவனை மன்னித்து அருளுமாறு பிரார்த்தனை செய்கின்றனர்.


கோபியர்களின் உடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மரத்தின் மேலே அமர்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணர்.








ஸ்ரீகிருஷ்ணர் இந்திரனால் உண்டான பெரும் மழையில் இருந்து பிருந்தாவனத்தைக் காக்க கோவர்த்தன கிரியை இடதுக்கை சுண்டு விரலால் தூக்கி நின்ற காட்சி.




கம்சனின் அரண்மனை வீரவிளையாட்டு மண்டபத்தில் குவளையப்பீடா என்ற யானையை  ஸ்ரீகிருஷ்ணர் சண்டையிட்டு கொல்லும் காட்சி.





நாளை (2-Sep-18) "கிருஷ்ண ஜெயந்தி"  என்பதால் அதற்கான பூஜைகள்!


Thursday, August 16, 2018

மேலணை / முக்கொம்பு அணை (Upper Anaicut / Mukkombu Dam)


தென்மேற்கு மழையின் தீவிரத்தால் கர்நாடகா திறந்தவிட்ட அபரிதமான நீரால் ... கரைபுரளும்  காவிரியைக் காண முக்கொம்பு நோக்கி ...

மேலணை:

திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணை. இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன.

காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து காவிரிப்பாசணப் பகுதி பொறியாளராக 1829 இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் மணல் மேடுகளால் நீர் போக்கு தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட அவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணிகள் 1834இல் தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846 இல் அணையின்மீது பால உள்ளிட்டவை கட்டப்பட்டன.

இவ்வணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன.

மேட்டூர் அணையில் இருந்து 177 கீலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும்.





தென் எல்லையைத் தவிர பரதக் கண்டத்தை ஆண்ட பெரும்பாலான பேரரசுகள் (முக்கிய காரணங்களுள் காவிரியும் ஓன்று)

ஒரு துளி மழைக் கூட இங்கு இல்லாமல் கடல்போல ஆர்ப்பரிக்கும் காவிரி ... இதுவரை இப்படிக் கண்டதில்லை ....







கொள்ளிடம், காவிரி பிரியும் மையப் பகுதியிலும், காவிரி தென்கரையிலும் பூங்கா உள்ளது.

கல்லணைக் கட்டிய "கரிகாலச் சோழன்"


மேலணைக் கட்டிய "ஆர்தர் காட்டன்"



சிறுவர்களை கவரும் வகையிலான குப்பைத்தொட்டிகள்





தமிழக-கேரள மலைத்தொடர்களின் மாதிரி






காற்றின் வேகத்தால் நீரின் ஆர்ப்பரிப்பு, முகத்தில் தெறிக்கும் சாரல் ... பிரமிப்பும், ஒரு வித நடுக்கமும் ... மேலணை பாலத்தில் நடக்கையில்!!!



























அணை மற்றும் பூங்கா ... போதிய பராமரிப்பு அல்ல ... பராமரிப்பே இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது!